முகப்பு
தற்போதைய செய்திகள்

பெண் குழந்தை பிறந்ததால் மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தந்தை தற்கொலை

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே உள்ள வி.குமாரமங்கலத்தைச் சேர்ந்த செல்வம் (45). இவரது மனைவி பெயர் பானுமதி (38). இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. நீண்ட வருடங்கள் கழித்து கடந்த

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:41 PM
பகிர்:

பெண் குழந்தை பிறந்தததால் மணம் உடைந்த தந்தை சிதம்பரம் மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே உள்ள வி.குமாரமங்கலத்தைச் சேர்ந்த செல்வம் (45). இவரது மனைவி பெயர் பானுமதி (38). இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. நீண்ட வருடங்கள் கழித்து கடந்த 5 வருடம் முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தற்போது 2வது முறையாக பானுமதி கர்ப்பமாகி பிரசவத்திற்காக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் பானுமதிக்கு வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் மணம் உடைந்த கணவர் செல்வம் மருத்துவமனை வராண்டாவில் உள்ள ஜன்னலில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.