முகப்பு
தற்போதைய செய்திகள்

சரியாக படிப்பு வராததால் +1மாணவி தீக்குளித்து தற்கொலை

 பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த முருகன் மகள் மகேஷ்நந்தினி. பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். சரியாக படிப்பு வரவில்லை

Updated On : 12 நவம்பர், 2013 at 7:28 PM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:14 AM

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் திங்கள்கிழமை பள்ளி மாணவி உடலில் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த முருகன் மகள் மகேஷ்நந்தினி. பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். சரியாக படிப்பு வரவில்லை என்ற மன வருத்ததில் இருந்த மகேஷ்நந்தினி ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனிமையில் இருந்த போது, உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீயிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பயனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.

 இது குறித்து முருகன் அளித்த புகாரின் அடிப்படையில் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.