சரியாக படிப்பு வராததால் +1மாணவி தீக்குளித்து தற்கொலை
பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த முருகன் மகள் மகேஷ்நந்தினி. பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். சரியாக படிப்பு வரவில்லை
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் திங்கள்கிழமை பள்ளி மாணவி உடலில் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த முருகன் மகள் மகேஷ்நந்தினி. பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். சரியாக படிப்பு வரவில்லை என்ற மன வருத்ததில் இருந்த மகேஷ்நந்தினி ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனிமையில் இருந்த போது, உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீயிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பயனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
இது குறித்து முருகன் அளித்த புகாரின் அடிப்படையில் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Advertisement