கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
தென்கிழக்கு வங்கக்கடலில் சென்னையில் இருந்து 420 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை சனிக்கிழமை மாலை நாகை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு
கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வெள்ளிக்கிழமை மாலை ஏற்றப்பட்டது.
தென்கிழக்கு வங்கக்கடலில் சென்னையில் இருந்து 420 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை சனிக்கிழமை மாலை நாகை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனைத்தொடர்ந்து கடந்த புதன்கிழமை மதியம் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. சனிக்கிழமை மாலை காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை தொடர்ந்து, கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வெள்ளிக்கிழமை மாலை ஏற்றப்பட்டுள்ளது.மாவட்டத்தின் சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை பெய்யவில்லை. குளிர்ந்த காற்று வீசி வருகிறது.