சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் ரயில் மறியல்: 172 பேர் கைது
கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு சென்று திருச்சி-சென்னை
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை ரயில்மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 172 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு சென்று திருச்சி-சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில துணை பொதுச்செயலாளர் ரா.காவியச்செல்வன், மாவட்ட துணைச் செயலாளர்கள் குறி்ஞ்சிவளவன், தமிழ்வளவன், வீராசாமி, கங்கை அமரன், பொருளாளர் அதியமான், நகர பொறுப்பாளர்கள் ரத்தினவேலு, பெரு.திருவரசு, ஆதிமூலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் 172 பேரை சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ராமமூர்த்தி, நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் கைது செய்தனர். ரயில் மறியல் போராட்டத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.