நெய்வேலி அருகே எம்ஜிஆர் சிலை சேதம்
நெய்வேலி அருகே முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியர்களை போலீஸôர் தேடிவருகின்றனர்.
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:17 AM
நெய்வேலி அருகே முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியர்களை போலீஸôர் தேடிவருகின்றனர்.
நெய்வேலி அருகே தாண்டவன்குப்பம் ஆட்டோகேட் பஸ்நிறுத்தம் பகுதியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலையை சுற்றி கட்டப்பட்டிருந்த தோரணங்கள் வெள்ளிக்கிழமை காலை கிழிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. மேலும் எம்ஜிஆர் முழு உருவ சிலையில், வலது கால் பகுதி சேதப்படுத்தப்பட்டு இருந்தது.
சிலையை சேதப்படுத்தியது தொடர்பாக அப்பகுதி அதிமுக கிளை செயலர் ராஜேந்திரன் நெய்வேலி தெர்மல் போலீஸில் புகார் அளித்தார். போலீஸôர் வழக்குப்பதிவு செய்து சிலையை சேதப்படுத்தியவர்களை தேடி வருகின்றனர்.
Advertisement