தற்போதைய செய்திகள்

கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

தென்கிழக்கு வங்கக்கடலில் சென்னையில் இருந்து 420 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை சனிக்கிழமை மாலை நாகை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு

பெ. விஜயபாஸ்கர்

கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வெள்ளிக்கிழமை மாலை ஏற்றப்பட்டது.

தென்கிழக்கு வங்கக்கடலில் சென்னையில் இருந்து 420 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை சனிக்கிழமை மாலை நாகை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனைத்தொடர்ந்து கடந்த புதன்கிழமை மதியம் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. சனிக்கிழமை மாலை காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை தொடர்ந்து, கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வெள்ளிக்கிழமை மாலை ஏற்றப்பட்டுள்ளது.மாவட்டத்தின் சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை பெய்யவில்லை. குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT