இந்து மகா சபை சார்பில் நடைப்பயணம் : 20 பேர் கைது
சாத்தான்குளத்தில் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், இந்து மகா சபை சார்பில் நடைப்பயணம் மேற்கொண்ட 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சாத்தான்குளத்தில் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், இந்து மகா சபை சார்பில் நடைப்பயணம் மேற்கொண்ட 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மகா சபை சார்பில் காவடி எடுத்து நடைப்பயணம் செய்ய அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.
எனினும், இன்று காலை நடைப்பயணமாக காமராஜர் சிலைப் பக்கம் வந்த இந்து மகா சபையைச் சேர்ந்த மாவட்டகௌரவ ஆலோசகர் மாநாடு செல்லதுரை பாண்டியன் தலைமையிலான 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Advertisement