தற்போதைய செய்திகள்

கடலூரில் நகைக் கடையில் பூட்டை உடைத்து ரூ. 1 கோடி மதிப்புள்ள  நகைகள் கொள்ளை

கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்தவர் சாந்திலால்(60). இவர் கடலூர் லாரன்ஸ் சாலையில் நகை கடை நடத்தி வருகிறார்.  வெள்ளிக்கிழமை இரவு சாந்திலால் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி சென்றார்

பெ. விஜயபாஸ்கர்

கடலூரில் நகை கடையில் கதவை உடைத்து ரூ. 1 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்தவர் சாந்திலால்(60). இவர் கடலூர் லாரன்ஸ் சாலையில் நகை கடை நடத்தி வருகிறார்.  வெள்ளிக்கிழமை இரவு சாந்திலால் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி சென்றார். சனிக்கிழமை காலை வழக்கம்போல் சாந்திலால் நகை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் 4 இரும்பு ஷட்டர்களும் கேஸ் வெல்டிங் மூலம் உடைக்கப்பட்டு நகை கடை திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கடையின் வைத்திருந்த 3  கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 1 கோடி.

இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீஸில் சாந்திலால் புகார் அளித்தார்.  போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, கைரேகை நிபுணர்களையும் வரவழைத்து தடயங்களை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எந்நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள கடலூர் லாரன்ஸ் சாலையில் கேஸ்  வெல்டிங் இயந்திரத்தை கொண்டு வந்து கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி வியாபாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT