தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில்அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வை 21284 பேர் எழுதுகிறார்கள்

அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2வில் அடங்கும் பணிகளுக்கான சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், துணை வணிக வரி அலுவலர், சார் பதிவாளர்-நிலை-2 அலுவலர், நிதித்துறை

எஸ். பாண்டியன்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்வை விருதுநகர் மாவட்டத்தில் 21284 பேர் தேர்வு எழுத இருக்கிறார்கள்.

அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2வில் அடங்கும் பணிகளுக்கான சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், துணை வணிக வரி அலுவலர், சார் பதிவாளர்-நிலை-2 அலுவலர், நிதித்துறை உதவி பிரிவு அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வருவாய் துறையில் அலுவலர் உள்ளிட்ட 19 வகையான  காலிபணியிடங்களுக்கான தேர்வு டிச.1ம் தேதி நடைபெற இருக்கிறது.

விருதுநகர் மாவட்டத்திலிருந்து இத்தேர்வு எழுதுவதற்கு 21284 பேர் விண்ணப்பம் செய்திருக்கின்றனர். இவர்களுக்காக விருதுநகர் 7 மையங்களில் 4683 பேரும், அருப்புக்கோட்டையில் 8 மையங்களில் 4584 பேரும், ராஜபாளையத்தில் 10 மையங்களில் 4287 பேரும், சிவகாசியில் 11 மையங்களில் 4090 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூரில் 6 மையங்களில் 3640 பேரும் என மொத்தம் 42 மையங்களில் தேர்வு எழுதுவதற்காக அமைக்கப்பட்டு்ள்ளன. இத்தேர்வு மையங்களுக்கான கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அலுவலர்கள் உள்ளிட்ட மேற்பார்வையாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இத்தேர்வுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருவதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT