முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் நகரில் காய்கறி மார்க்கெட் பின்புறம் தீவிபத்து: 3 வீடுகள் எரிந்து நாசம்

சிதம்பரம் நகரில் மேலவீதி காய்கறி மார்க்கெட்டின் பின்புறம் உள்ள கொத்தவால் ஸ்டேஷன் தெருவில் திங்கள்கிழமை இரவு திடீரென தீப்பிடித்து 3 குடிசை வீடுகள் எரிந்து சேதமுற்றன.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:57 PM
பகிர்:

சிதம்பரம் நகரில் மேலவீதி காய்கறி மார்க்கெட்டின் பின்புறம் உள்ள கொத்தவால் ஸ்டேஷன் தெருவில் திங்கள்கிழமை இரவு திடீரென தீப்பிடித்து 3 குடிசை வீடுகள் எரிந்து சேதமுற்றன.

கொத்தவால்ஸ்டேஷன் தெருவில் சின்னப்பொன்னு என்பவரது குடிசை வீட்டில் இரவு 8 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. தீப்பரவி அருகாமையில் இருந்த சுப்பிராயலு, குமார் ஆகிய இருவரின் குடிசை வீடுகளும் தீயில் சேதமுற்றன.

தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து சென்று தீ பரவாமல் தடுத்து அணைத்தனர். மர்மான முறையில் தீப்பிடித்தது குறித்து நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சின்னப்பொன்னுவின் மகளுக்கும், மருமகனுக்கும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தகராறில் மருமகன் நாளை வீட்டை கொளுத்தி விடுவதாக கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.