வரும் கல்வியாண்டு முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழக அனுமதி சேர்க்கை தமிழ்நாடுஅரசு கவுன்சிலிங் மூலம் நடைபெற உள்ளதாக தகவல
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல், மருத்துவப்படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு அரசு கவுன்சிலிங் மூலம் நடைபெறும் என பல்கலைக்கழக அதிகாரி
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல், மருத்துவப்படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு அரசு கவுன்சிலிங் மூலம் நடைபெறும் என பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:
அண்ணாமலைப் பலகலைக்கழக சட்டம் 2013 Act-ன் படி வரும் கல்வி ஆண்டு முதல் பல்கலைக்கழக தொழிற்படிப்புகளான பொறியியல், மருத்துவம், பல்மருத்துவம், வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை தமிழ்நாடு அட்மிஷன் இன் புரபஷனல் எஜூகேஷனல் இன்ஸ்ட்டியுஷன்ஸ் ஆக்ட் 2006-ன் (Tamil Nadu Admission in Professional Institutions Acy-2006) படி தமிழ்நாடு அரசு கவுன்சிலிங் மூலம் நடைபெறும். மேலும் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் இந்த கல்வியாண்டில் இதுவரை 70 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர் என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.