முகப்பு
தற்போதைய செய்திகள்

வயிற்று வலி தாங்காமல் விஷம் அருந்தி பெண் தற்கொலை

விருதுநகர் அருகே சிவஞானபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள்(45). இவரது கணவர் மாரியப்பன்(55). இவர் கடந்த சில நாள்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல்

Updated On : 28 நவம்பர், 2013 at 3:39 PM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:30 AM

விருதுநகர் அருகே சிவஞானபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள்(45). இவரது கணவர் மாரியப்பன்(55). இவர் கடந்த சில நாள்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் வேதனையில் இருந்துள்ளார்.

இதனால், மனம் உடைந்த நிலையில் தனது தோட்டத்திற்கு சென்று பயிர்களுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த மருந்தை குடித்து விட்டு படுத்து கிடந்தாராம். அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனே விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் புதன்கிழமை இரவு உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மனைவி பாண்டியம்மாள் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.