வயிற்று வலி தாங்காமல் விஷம் அருந்தி பெண் தற்கொலை
விருதுநகர் அருகே சிவஞானபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள்(45). இவரது கணவர் மாரியப்பன்(55). இவர் கடந்த சில நாள்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல்
விருதுநகர் அருகே சிவஞானபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள்(45). இவரது கணவர் மாரியப்பன்(55). இவர் கடந்த சில நாள்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் வேதனையில் இருந்துள்ளார்.
இதனால், மனம் உடைந்த நிலையில் தனது தோட்டத்திற்கு சென்று பயிர்களுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த மருந்தை குடித்து விட்டு படுத்து கிடந்தாராம். அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனே விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் புதன்கிழமை இரவு உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மனைவி பாண்டியம்மாள் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் விசாரணை செய்து வருகின்றனர்.