கணவனுடன் ஏற்பட்ட தகறாறில் மனைவி தீக்குளித்து தற்கொலை
இளையான்குடி அருகே குமாரகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி இவரது மனைவி சீதா(30) இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட தகறாறு காரணமாக வீட்டில் யாரும்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கணவருடன் ஏற்பட்ட தகறாறில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இளையான்குடி அருகே குமாரகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி இவரது மனைவி சீதா(30) இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட தகறாறு காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சீதா தனது உடம்பில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இச் சம்பவம் குறித்து இளையான்குடி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.