கரூர் வேலாயுதம்பாளையத்தில் லாரியில் இருந்து விழுந்த சுமை தூக்கும் தொழிலாளி வியாழக்கிழமை இறந்தார்.
நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியை சேர்ந்தவர் சண்முகம்(55). இவர் காகிதபுரத்தில் உள்ள லாரியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார். வியாழக்கிழமை லாரியில் மூட்டைகளை ஏற்றிய போது தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.