ஓட்டுநர்-போலீஸாருக்கு இடையே மோதல்: கோவை அருகே சாலை மறியல்
கோவை மாவட்டம் துடியலூர் அருகே தனியார் பேருந்துகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் துடியலூர் அருகே அரசு / தனியார் பேருந்துகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
போலீசாருக்கும் பேருந்து ஓட்டுநர், நடத்துனருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பிரச்னையாக உருவெடுத்தது. இதனால் கோயமுத்தூர் மேட்டுப்பாளையம் சாலையில் ஆங்காங்கே தனியார் பேருந்துகளை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.