தமிழர் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தைச் சொல்லாமல் முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற வேண்டும்: ஏ.எம்.ஜெமீல்
சிறுபான்மையினரின் உரிமைகள் பேணப்பட வேண்டும் என்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அன்றும் இன்றும் உறுதியான நிலைப்பாடுடனேயே செயற்பட்டு வருகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தைக் காட்டிக் கொள்ளாமல் இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளைப் பெறுவதற்கான செயல்திட்டங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டுள்ளதாக இலங்கையின் கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்
மேலும் பெரும்பான்மை சிங்கள சமூகத்தினரை பகைத்துக் கொள்ளாமல் முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றாக வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
சிறுபான்மையினரின் உரிமைகள் பேணப்பட வேண்டும் என்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அன்றும் இன்றும் உறுதியான நிலைப்பாடுடனேயே செயற்பட்டு வருகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.