முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்திய கடல் எல்லையில் சீன போர்க் கப்பல் சுற்றி வளைப்பு?

இந்திய கடல் எல்லைப் பகுதியில் போர்க் கப்பல் ஒன்றை கடலோரக் காவல் படையினர் சுற்றி வளைத்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

இந்திய கடல் எல்லைப் பகுதியில் போர்க் கப்பல் ஒன்றை கடலோரக் காவல் படையினர் சுற்றி வளைத்தனர்.

தூத்துக்குடி கடலோரமாக வந்த மர்மக் கப்பலை தூத்துக்குடி கடலோரக் காவல் படையினர் சுற்றி வளைத்து பிடித்து, அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த கப்பல் சீனாவைச் சேர்ந்த போர்க் கப்பல் என்று முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடலோரக் காவல் படையினர் கப்பலில் இருந்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதால் விரைவில் அது பற்றிய உறுதியான தகவல்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கடலோரக் காவல் படையின் தூத்துக்குடி பிரிவு கட்டளை அதிகாரி ஆனந்தகுமார் கூறுகையில், கப்பல் பிடிபட்டது உண்மை. அது வியாபாரக் கப்பலோ, மீன் பிடி கப்பலோ இல்லை. போர்க் கப்பல் என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேற்கொண்டு எந்த தகவலையும் இப்போதைக்குக் கூற இயலாது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.