முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் அமெரிக்க தனியார் கப்பல் சிறைபிடிப்பு : 3 வழக்குகள் பதிவு

தூத்துக்குடி அருகே அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பலை கடலோரக் காவல் படையினர் சனிக்கிழமை பிடித்தனர். அந்த கப்பல் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

தூத்துக்குடி அருகே அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பலை கடலோரக் காவல் படையினர் சனிக்கிழமை பிடித்தனர். அந்த கப்பல் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி கடலோரப் பகுதியில் பிடிபட்ட அந்த கப்பலில் 35 துப்பாக்கிகள், 25 வீரர்கள், 11 மாலுமிகள் இருந்தனர். அந்த கப்பல் அப்பகுதியில் வந்தது மற்றும் பல்வேறு தகவல்களை கடலோரக் காவல் படை,  துத்துக்குடி காவல்துறையினர், க்யூ பிரிவு போலீஸார், உளவுத் துறை போலீஸார் விசாரணை  செய்து வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில், அந்த கப்பல் நிறுவனம் மீது மன்னார் வளைகுட பகுதியில் அத்துமீறி நுழைந்ததாகவும், ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும், தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்களிடம் 1500 லிட்டர் டீசலை திருட்டுத் தனமாகப் பெற்றுள்ளதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கப்பலில் உள்ளவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.