கணவர் இறந்தசோகம் விஷம்தின்று மனைவி சாவு
மேலவளவு அருகே உள்ள தனக்கம்பட்டியை சேர்ந்த பெண் கணவர் இறந்த சோகத்தில் அரளிவிதையைத் தின்று இறந்தார்.
மேலவளவு அருகே உள்ள தனக்கம்பட்டியை சேர்ந்த பெண் கணவர் இறந்த சோகத்தில் அரளிவிதையைத் தின்று இறந்தார்.
தனக்கம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (29) மனைவி மீநாட்சி (21). இவரது கணவர் நெல்அறுவடை இயந்திரத்தில் கை சிக்கி காயமடைந்தார். சிகிச்சை பலனின்றி கடந்த சிலமாதங்களுக்குமுன் இறந்தார். இந்நிலையில் மீனாட்சி அரளிவிதையைத் தின்று சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தார். மேலவளவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.