முகப்பு
தற்போதைய செய்திகள்

உரங்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள

தற்போதைய செய்திகள்

உரங்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:18 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) செ.மதியழகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட செய்திக் குறிப்பு:

 விவசாயிகள் எந்த இடுபொருள் வாங்கினாலும் வாங்கும் விற்பனை நிலையத்தில் விற்பனைக்கான ரசீது கேட்டு வாங்க வேண்டும். பொதுவாக உரத்துக்கு உர மூட்டைகளில் விற்பனை விலை அச்சிடப்பட்டு இருக்கும். அதனை விவசாயிகள் கவனமாக பார்த்து வாங்க வேண்டும்.

 எல்லா உரங்களிலும் வெவ்வேறு நிறுவனங்கள் தயாரித்தாலும் அதல் இருக்கும் சத்துக்கள் மாறாது. குறிப்பாக யூரியாவை எடுத்து கொண்டால் எந்த நிறுவனம் தயாரித்தாலும் அதில் தழைச்சத்து 46  சதவிகிதம்தான் இருக்கும் . அதனால் விவசாயிகள் ஒரு குறிப்பிட்ட நிறுவன உரங்கள்தான் வாங்க வேண்டும் என நினைத்து வாங்க கூடாது.

  உரம் சம்பந்தமான ஏதாவது பிரச்னை விவசாயிகளுக்கு இருந்தால் உடனே 94436 56811 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளவும். மேலும் உர விற்பனையாளர்கள் தாங்கள் வாங்கும் உரத்துக்கான கொள்முதல் ரசீதை விற்பனை நிலையத்தில் பராமரிக்க வேண்டும். முறையான பதிவேடு , விற்பனை ரசீது பராமரிக்க வேண்டும். விற்பனை ரசீதில் விவசாயிகளின் முகவரியிட்டு கையொப்பம் வாங்க வேண்டும்.

 அறிமுகமில்லாத அல்லது அரசு அங்கீகாரம் இல்லாத உர உற்பத்தியாளர்களிடம் உரம் வாங்கி விற்பனை செய்யக்கூடாது. உரம் விற்பனை சம்பந்தமான விலை பட்டியல் விவசாயிகளுக்கு தெரியும்படி பராமரிக்க வேண்டும். உர உரிமம் இல்லாமல் உர விற்பனை செய்யக்கூடாது.

 உர மூட்டை வந்ததும் மூட்டை எடை பார்த்துதான் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் உரக்கட்டுபாடு ஆணை 1985 மற்றும் அத்தியாவசிய பண்ட சட்டம் 1955 மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வாங்கி கொடுக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.                               

முழு கட்டுரையைப் படிக்க →