ஒடுக்கத்தூர் அருகே மின்சாரம் தாக்கி மாணவர் ஒருவர் வியாழக்கிழமை இறந்தார். பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒடுகத்தூர் அருகே வெங்கனபாளையம் கிராமத்தை சேர்ந்த கோபியின் மகன் சத்திவேல்(16). இவர் ஒடுகத்தூர் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று காலை அங்குள்ள பொது குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் இறைப்பதற்காக அங்கிருந்த மோட்டார் ஸ்விட்சை இயக்கியுள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அதனைத் தொடர்ந்து பம்ப் ஆபரேட்டரை நியமிக்காமல் இருப்பதை கண்டித்தும், ஏற்கனவே மின்சார கசிவு பிரச்சனை இருப்பதை சுட்டிகாட்டியும் அதை சரிசெய்யாமல் இருந்ததை கண்டித்தும் பொதுமக்கள் ஒடுக்கத்தூர் - வேலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் வட்டாட்சியர் சாந்தி, வருவாய் கோட்டாட்சியர் சண்முகசுந்தரம், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் மு. கலையரசு ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
மாணவர் மின்சாரம் பாய்ந்து இறந்தது குறித்து வேப்பங்குப்பம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.