முகப்பு
தற்போதைய செய்திகள்

கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் 3 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

பாளையங்கோட்டையில் தூய யோவான் கல்லூரியில் பேராசிரியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 3 வது நாளாக செவ்வாய்க்கிழமை பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிருப்பு

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:23 PM
பகிர்:

பாளையங்கோட்டையில் தூய யோவான் கல்லூரியில் பேராசிரியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 3 வது நாளாக செவ்வாய்க்கிழமை பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இக்கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவர்களின் ஓய்வு அறைகளை திறக்க வேண்டும். மாணவர் பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மாணவர்கள், பேராசிரியர்கள் திடீரென உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் பீட்டர்பேரின்பராஜ், ஆங்கிலத்துறை பேராசிரியர் ஹெய்ஸ்தாசன் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்து திங்கள்கிழமை மாணவர்கள், பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே தேர்வு நெருங்கி வரும் நிலையில் இளங்கலை வகுப்புகளை திறக்க வேண்டும். பேராசிரியர்களின் தற்காலிக பணியிடை நீக்கம் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி 3 வது நாளாக கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூட்டா அமைப்பின் தலைவர் அருள்ஞானம், இந்திய மாணவர் பேரவை மாவட்டச் செயலர் அசோக், துணைச் செயலர் விஜயகுமார் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருமண்டல பெருமன்ற உறுப்பினர் வேதநாயகம், இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →