கேரளத்துக்கு மணல் கடத்த முயன்ற லாரி பறிமுதல்
களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மேரி ஜெமிதா தலைமையில் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு களியக்காவிளை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது
களியக்காவிளை அருகே கேரளத்துக்கு மணல் கடத்திச் செல்ல முயன்ற லாரியை போலீஸôர் பறிமுதல் செய்தனர்.
களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மேரி ஜெமிதா தலைமையில் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு களியக்காவிளை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்த முயன்றனர். லாரியை நிறுத்தாமல் போலீஸார் மீது மோதுவது போல வந்து சிறிது தொலைவில் நிறுத்திவிட்டு அதன் டிரைவர் தப்பியோடிவிட்டார்.போலீஸார் லாரியை சோதனையிட்டபோது அதில் ஆற்று மணல் பதுக்கி வைத்திருந்ததும், மணலை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து மணல் லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.