முகப்பு
தற்போதைய செய்திகள்

டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர்கள் 2 பேர் சாவு

பெரம்பலூர் அருகே உள்ள கீழக்குடிகாடு கிராமத்தை சேர்ந்த வெங்கடாஜலம் மகன் வெற்றிவேல் (26), திருமாந்துறை கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் மகன் சதீஸ்குமார் (22). இருவரும், பெரம்பலூரில் இருந்து

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:25 PM
பகிர்:

பெரம்பலூர் அருகே, புதன்கிழமை இரவு டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

பெரம்பலூர் அருகே உள்ள கீழக்குடிகாடு கிராமத்தை சேர்ந்த வெங்கடாஜலம் மகன் வெற்றிவேல் (26), திருமாந்துறை கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் மகன் சதீஸ்குமார் (22). இருவரும், பெரம்பலூரில் இருந்து கீழக்குடிகாடு கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் புதன்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வல்லாபுரம் பிரிவுசாலை அருகே சென்றபோது, எதிரே சென்ற டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வெற்றிவேலும், சதீஸ்குமாரும் சம்பவ இடத்திலேயே புதன்கிழமை இரவு உயிரிழந்தனர்.

தகவலறிந்த மங்கலமேடு போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்தவர்களின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், மங்கலமேடு போலீஸார் வழக்குப் பதிந்து  விசாரிக்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →