முகப்பு
தற்போதைய செய்திகள்

அம்பை அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் தீ: போக்குவரத்து பாதிப்பு

அம்பாசமுத்திரத்தில் வைக்கோல் போர் ஏற்றி வந்த லாரியில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 300 கட்டு வைக்கோல் போர் எரி்ந்து சேதமடைந்தது. இந்த விபத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:29 PM
பகிர்:

அம்பாசமுத்திரத்தில் வைக்கோல் போர் ஏற்றி வந்த லாரியில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 300 கட்டு வைக்கோல் போர் எரி்ந்து சேதமடைந்தது. இந்த விபத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் தென்காசி பிரதான சாலையில் அம்பாசமுத்திரம் அருகே நுகர்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கி அருகில் வயலில் இருந்து வைக்கோல் கட்டுகளை ஏற்றிக் கொண்டு பிரதான சாலைக்கு வந்து கொண்டிருந்தது. லாரியை கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் ஓட்டினார்.

பிரதான சாலைக்கு வந்த போது, எதிர்பாராத விதமாக மின் வயர் உரசியதில் லாரியில் இருந்த வைக்கோல் கட்டுகளில் தீப்பற்றியது. தீ மளமளவென எரியத் தொடங்கியதால் அங்கு புகை மண்டலமாக காட்சியளித்து. தகவலறிந்த அம்பாசமுத்திரம் தீயணைப்புபடை வீரர்கள் நிலைய அலுவலர் சி. ராஜூ தலைமையில் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் லாரியில் இருந்து 300 கட்டு வைக்கோல் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்தினால் அம்பை, தென்காசி பிரதான சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அம்பாசமுத்திரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →