சிதம்பரம் அருகே வெள்ளாற்றில் மூழ்கி முதியவர் சாவு
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள அள்ளூரில் வசித்து வருபவர் தட்சிணாமூர்த்தி (60). சேத்தியாத்தோப்பில் வாரசந்தையில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை
சிதம்பரம் அருகே வெள்ளாற்றில் மூழ்கி முதியவர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள அள்ளூரில் வசித்து வருபவர் தட்சிணாமூர்த்தி (60). சேத்தியாத்தோப்பில் வாரசந்தையில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு வெள்ளாற்றில் குளித்த போது சுழலில் சிக்கி நீரில் மூழ்கினார். தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு தீயணைப்பு மீட்புத்துறையினர் சென்று ஆற்றில் மூழ்கி இறந்த தட்சிணாமூர்த்தியின் உடலை மீட்டனர். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.