முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் கோயில் தேரோட்டம்!

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் சிவகங்கை மேற்குகரையில் அமைந்துள்ள திருக்காமக்கோட்டம் என்ற ஸ்ரீசிவகாமி அம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் செவ்வாய்க்கிழமை வெகு

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:31 PM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் சிவகங்கை மேற்குகரையில் அமைந்துள்ள திருக்காமக்கோட்டம் என்ற ஸ்ரீசிவகாமி அம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

இக்கோயிலில் உள்ள சிவகாமசுந்தரியின் பெயர் திருக்காமக் கோட்டமுடைய பெரியநாச்சியார் என்று கல்வெட்டில் குறிக்க பெற்றுள்ளது. வெளிச்சுற்றில் சித்தரகுப்தன், நடுக்கம் தீர்த்த விநாயகர், ஆதிசங்கரர், ஸ்ரீசக்கரம் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இச்சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி பூர உற்சவம் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மனுக்கு நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஐப்பசி பூர உற்சவம் அக்.21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  அக்.29-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை கோயிலிலிருந்து ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் புறப்பட்டு திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் கீழவீதி தேர்நிலையிலிருந்து தேர் புறப்பட்டு தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக மதியம் தேர் நிலையை அடைந்தது. தேர்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் எழுத்தனர். நாளை அக்.30-ம் தேதி புதன்கிழமை பட்டு வாங்கும் உற்சவம் மற்றும் பூரச்சலங்கை உற்சவமும், அக்.31-ம் தேதி வியாழக்கிழமை காலை தபசு உற்சவமும், இரவு ஸ்ரீசிவானந்த நாயகி சமேத ஸ்ரீ சோமாஸ்கந்தர் திருக்கல்யாண உத்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.