முகப்பு
தற்போதைய செய்திகள்

காட்டுமன்னார்கோயில் அகதிகள் முகாமில் தனி துணை ஆட்சியர் ஆய்வு!

காட்டுமன்னார்கோயில் அருகே குப்பங்குழியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இம்முகாமில் 75 குடும்பங்களைச் சேர்ந்த 241 பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அகதிகள் தனி துணை

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:32 PM
பகிர்:

காட்டுமன்னார்கோயில் அகதிகள் முகாமில் சென்னை அகதிகள் மறுவாழ்வு தனி துணை ஆட்சியர் நோவலின் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

காட்டுமன்னார்கோயில் அருகே குப்பங்குழியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இம்முகாமில் 75 குடும்பங்களைச் சேர்ந்த 241 பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அகதிகள் தனி துணை ஆட்சியர் நோவலின் முகாமிற்கு புதன்கிழமை சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர் வீடு, வீடாக சென்று இருப்பிடம் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மின்சார வசதி சரியாக இல்லை என்றும், கழிவுநீர் வடிகால் இல்லை என்றும் தெரிவித்தனர். உடனடியாக செய்து தரும்படி அதிகாரிகளுக்கு இணை இயக்குநர் உத்தரவிட்டார். ஆய்வின் போது நேர்முக உதவியாளர் அசோக்குமார், கடலூர் இலங்கை அகதிகள் முகாம் தனி வட்டாட்சியர் அன்புச்செல்வி, வட்டாட்சியர் வெங்கடாஜலம், முகாம் தலைவர் சுமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.