சிதம்பரம் பல்கலை மாணவியிடம் செயின் பறிப்பு
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மதுராந்தகநல்லூரைச் சேர்ந்தவர் பழனி. குஜராத்தில் கப்பல் படை அதிகாரியாக பணியாற்றும் இவரது மகள் பராசக்தி (21). இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில்
சிதம்பரம் அருகே மொபெட்டில் சென்ற பல்கலை. மாணவியை வழிமறித்து மர்மநபர்கள் ஒன்றரை பவுன் செயினை பறித்துச் சென்றனர்.
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மதுராந்தகநல்லூரைச் சேர்ந்தவர் பழனி. குஜராத்தில் கப்பல் படை அதிகாரியாக பணியாற்றும் இவரது மகள் பராசக்தி (21). இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் விடுதியில் தங்கி பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை மதுராந்தகநல்லூரில் உள்ள பாட்டி வீட்டிற்கு மொபெட்டில் சென்றுள்ளார். அப்போது கீழநத்தம் எனுமிடத்தில் 2 மர்மநபர்கள் வழிமறித்து கழுத்திலிருந்த ஒன்றரை பவுன் செயினை மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தலைமறைவானார்கள். இதுகுறித்து புகாரின் பேரில் சிதம்பரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.