முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் 32 சிலைகள் கரைப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிதம்பரம் தாலுக்காவில் மொத்தம் 91 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.சிதம்பரம் நகரில் 5 அடி உயரத்திலான மொத்தம் 11

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:50 AM
பகிர்:

விநாயகர் சதுர்த்தி அன்று சிதம்பரம், அண்ணாமலைநகர், குமராட்சி பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிதம்பரம் தாலுக்காவில் மொத்தம் 91 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.சிதம்பரம் நகரில் 5 அடி உயரத்திலான மொத்தம் 11 விநாயகர்சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இவையல்லாமல் சிதம்பரம் தாலுக்கா பகுதியில் 6 சிலைகளும், கிள்ளையில் 5 சிலைகளும், அண்ணாமலைநகரில் 14 சிலைகளும், புவனகிரியில் 8 சிலைகளும், மருதூரில் 8 சிலைகளும், பரங்கிப்பேட்டையில் 22 சிலைகளும், புதுச்சத்திரத்தில் 91 சிலைகளும் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

சிதம்பரம், அண்ணாமலைநகர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 32 சிலைகள் புதன்கிழமை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் கரைக்கப்பட்டன. பரங்கிப்பேட்டை, கிள்ளை, புதுச்சத்திரம் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் சாமியார்பேட்டை, பெரியகுப்பம் பகுதி கடலிலும் கரைக்கப்பட்டது. எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →