முகப்பு
தற்போதைய செய்திகள்

மனநிலை பாதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை

இராமநாதபுரம் மாவட்டம் கருக்காவலசை அடுத்த மானாங்குடியை சேர்ந்தவர் காந்தி மகன் மகேந்திரன்(37).  இவருக்கு 10 வருடங்களுக்கு முன் திருமணமாகி வேணி என்ற மனைவியும், இரு மகன்களும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:46 PM
பகிர்:

பழனி அருகே மனநிலை பாதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இராமநாதபுரம் மாவட்டம் கருக்காவலசை அடுத்த மானாங்குடியை சேர்ந்தவர் காந்தி மகன் மகேந்திரன்(37).  இவருக்கு 10 வருடங்களுக்கு முன் திருமணமாகி வேணி என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர்.  இந்நிலையில் குடிப்பழக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மனநிலை பாதித்த நிலையில் மகேந்திரன் சுற்றிவந்துள்ளார்.  வெள்ளிக்கிழமை பழனியை அடுத்த விருப்பாட்சி வனத்துறை அலுவலகம் அருகே உள்ள புளியமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து விபரமறிந்த காந்தி கொடுத்த புகாரின் பேரில் சத்திரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.