மேலூரில் மலிவுவிலை அரிசி விற்பனை நிறுத்தம்: பொதுமக்கள் அவதி
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் தமிழக அரசின் கிலோ ரூ.20 விலையிலான மலிவுவிலை அரிசி விற்பனை நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் தமிழக அரசின் கிலோ ரூ.20 விலையிலான மலிவுவிலை அரிசி விற்பனை நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
அரிசி விலை உச்சபட்சமாக கிலோ ரூ.45-க்கு மேல் விலைஉயரத் தொடங்கியதும், பொதுமக்கள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் தமிழக முதல்வர் கிலோ ரூ.20 விலையில் அரிசி விற்பனையை தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின்கீழ் மேலூர் தாலுகாவிற்கு முதல்கட்டமாக ஒதுக்கப்பட்டது. மேலூர் நுகர்பொருள் வாணிபகழக கிடங்கில் வைக்கப்பட்டு ஒருமாதாமாக அதிகாரிகள் உரிய அனுமதியளிக்காததால் கிடங்கில் இருப்பு இருப்பது தினமணியில் ஜூலைமாதம் செய்திவெளியானது.
இதையடுத்து மேலூர் சந்தைப்பேட்டை விற்பனைசங்க கிடங்கில் ரூ.20 விலைக்கு அரிசி விநியோகமானது. மொத்த அரிசியும் விற்பனையாகிவிட்டது. வெளிமார்க்கெட்டைவிட விலை குறைவாகவும் அரிசி தரமாகவும் இருந்ததால் பொதுமக்கள் அதிகம் விரும்பி வாங்கினர். இந்தநிலையில் மதுரை அரிசி அரவை ஆலையில் ஸ்டாக் உள்ள அரிசியை காலிசெய்யும் நோக்கில் பழுப்பான விற்பனை செய்ய அதிகாரிகள் வலியுறுத்தல் காரணமாக கிலோ ரூ.20 அரிசி விற்பனை கடந்த 2 வாரமாக நிறுத்தப்பட்டுவிட்டது.
இந்நிலையில் பொதுமக்கள் ஏராளமானோர் தினசரி மேலூர் விற்பனை சங்கக் கிடங்கை பார்த்து ஏமாற்ற்ததுடன் திரும்பிச் செல்கின்றனர். கிலோ ரூ.20 மலிவுவிலை அரிசி விற்பனையைத் தொடங்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடத்துள்ளனர்.