முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்கள் மூவர் வாபஸ்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்திருந்த சுயேட்சை வேட்பாளர்கள் மூவர் செவ்வாய்க்கிழமை தங்களது

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:56 AM
பகிர்:

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்திருந்த சுயேட்சை வேட்பாளர்கள் மூவர் செவ்வாய்க்கிழமை தங்களது மனுவை திரும்ப பெற்றனர்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பி. பிரபாகரன் (அதிமுக), சி. தேவதாசசுந்தரம் (திமுக), எஸ்.எஸ். ராமசுப்பு (காங்கிரஸ்), எஸ். சிவனணைந்தபெருமாள் (மதிமுக), மை.பா. ஜேசுராஜ் (ஆம் ஆத்மி), வி.எம்.எஸ். முகம்மதுமுபாரக் (எஸ்.டி.பி.ஐ) உள்பட 37 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.

இதில் மாற்று வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் 7 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனிடையே இத்தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்திருந்த ஏே. ஜெபாஸ்டியான்ரகு, ஐ. உஸ்மான்கான், டி. லீதியாள்தேவதாஸ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை தங்களது மனுவை திரும்ப பெற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →