தற்போதைய செய்திகள்

பங்குனி உத்திர திருவிழா: முருகன் கோயில்களுக்கு சிறப்புப் பேருந்து

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஏப்ரல் 12 முதல் 15-ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது.

க. தங்கராஜா

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஏப்ரல் 12 முதல் 15-ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது.

 வரும் 13-ம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகன் கோயில்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தச் செல்வது வழக்கம். இதையொட்டி சேலம் கோட்டம் சார்பில் பழனி, கொடுமுடி, வடசென்னிமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 சேலத்திலிருந்து ஈரோடு, காங்கேயம் வழியாக பழனிக்கும், நாமக்கல்லில் இருந்து கரூர் வழியாக பழனிக்கும், நாமக்கலில் இருந்து கொடுமுடி வழியாக பழனிக்கும், சேலத்திலிருந்து ஆத்தூர் வழியாக வடசென்னிமலைக்கும்,

கள்ளக்குறிச்சியிலிருந்து வடசென்னிமலைக்கும், தருமபுரியிலிருந்து பழனிக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

 மேலும் வரும் 14-ம் தேதி பெüர்ணமியை முன்னிட்டு சேலத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. எனவே பயணிகள் அனைவரும் நெரிசலைத் தவிர்த்து பயணம் செய்திடும்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT