தமிழ்ப்புத்தாண்டு: நெல்லையப்பர் கோயிலில் சிறப்பு வழிபாடு
திருநெல்வேலியில் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு தினத்தையொட்டி திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு, சமய சொற்பொழிவு ஆகியன நடைபெற்றது.
திருநெல்வேலியில் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு தினத்தையொட்டி திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு, சமய சொற்பொழிவு ஆகியன நடைபெற்றது.
தமிழ்ப்புத்தாண்டு தினத்தையொட்டி திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை 6 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் திருநாவுக்கரசரின் அருள்நெறி என்ற தலைப்பில் சு. விமலா சுப்பிரமணியம், திருப்படையெழுச்சி என்ற தலைப்பில் சிவகாந்தி, தொண்டர் சீர் பரவுவார் என்ற தலைப்பில் கம்பபாதசேகரன் ஆகியோர் சொற்பொழிவு ஆற்றினர்.