சிதம்பரத்தில் சிறுமியிடம் சில்மிஷம்: முதியவர் கைது
சிதம்பரத்தில் சிறுமியிடம் சில்மிஷத்திடம் ஈடுபட்ட முதியவரை நகர போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.
சிதம்பரத்தில் சிறுமியிடம் சில்மிஷத்திடம் ஈடுபட்ட முதியவரை நகர போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.
சிதம்பரம் பெரியவாணியத்தெருவைச் சேர்ந்தவர் ஹாஜாஅலாவுதீன் (65). அவர் அதே தெருவில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடைக்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அங்கிருந்த தப்பிய சிறுமி தனது தாயாரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் கடைக்கு சென்று ஹாஜாஅலாவுதீனை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவரை ஆபாசமாக திட்டி தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து ஹாஜா அலாவுதீனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.