முகப்பு
தற்போதைய செய்திகள்

கல்லால் தாக்கி முதியவர் கொலை

திருநெல்வேலி அருகேயுள்ள புதுக்குளம் சி.எஸ்.ஐ. சர்ச் தெருவைச் சேர்ந்த ஆபிரகாம் மகன் செல்லையா (85). விவசாயி. இவருக்கும், இவரது அண்ணன் ராஜாமணியின் மகன் பொக்கிஷம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:38 AM
பகிர்:

திருநெல்வேலி அருகேயுள்ள புதுக்குளத்தில் கல்லால் தாக்கி முதியவர் ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது அண்ணன் மகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி அருகேயுள்ள புதுக்குளம் சி.எஸ்.ஐ. சர்ச் தெருவைச் சேர்ந்த ஆபிரகாம் மகன் செல்லையா (85). விவசாயி. இவருக்கும், இவரது அண்ணன் ராஜாமணியின் மகன் பொக்கிஷம் என்பவருக்கும் சொத்துத்தகராறு இருந்து வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆனால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லையாம்.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை புதுக்குளம் பகுதியில் செல்லையா நின்று கொண்டிருந்தபோது அவருக்கும், பொக்கிஷத்திற்கும் தகராறு ஏற்பட்டதாம். இதில் கல்லால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த செல்லையா இறந்தார்.

தகவலறிந்த முன்னீர்பள்ளம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். செல்லையாவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →