தற்போதைய செய்திகள்

போலி சான்றிதழ்: அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் கைது

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்து மோசடி செய்ததாக உதவிப் பேராசிரியர் ஒருவரை அண்ணாமலைநகர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர். 

ஜி. சுந்தர் ராஜன்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்து மோசடி செய்ததாக உதவிப் பேராசிரியர் ஒருவரை அண்ணாமலைநகர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர். 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறையில் போலி பிளஸ்டூ சான்றிதழ் கொடுத்து உதவிப் பேராசிரியராக சேர்ந்து மோசடி செய்துள்ளதாக சிதம்பரம் அம்மாப்பேட்டை தில்லைக்காளியம்மன் நகரைச் சேர்ந்த ஆர்.ராஜாமோகன் (36) மீது பல்கலைக்கழக பதிவாளர் என்.பஞ்சநதம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் உதவிப் பேராசிரியர் ஆர்.ராஜாமோகன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். உதவிப் பேராசிரியர் ஆர்.ராஜாமோகன் சொந்த ஊர் கடலூர் பண்ருட்டி ஆகும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT