திருநெல்வேலி சிவந்திப்பட்டி அருகே ரயில்வே கேட்டில் ஒரு ஆண் சடலம்: போலீஸார் தீவிர விசாரணை
திருநெல்வேலி சிவந்திப்பட்டி அருகே உள்ள ஸ்ரீராமன் குளம் ரயில்வே கேட்டில் இன்று காலை தலைவேறு உடல் வேறாக ஒருவரின் சடலம் கிடந்ந்தது.
திருநெல்வேலி சிவந்திப்பட்டி அருகே உள்ள ஸ்ரீராமன் குளம் ரயில்வே கேட்டில் இன்று காலை தலைவேறு உடல் வேறாக ஒருவரின் சடலம் கிடந்ந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சிவந்திப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று வழக்குப்பதிவு செய்து இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர் குறித்த தகவல் ஏதும் இன்னும் தெரிய வரவில்லை. எனினும் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.