முகப்பு
தற்போதைய செய்திகள்

கோபி அருகே மாமியாரை வெட்டி கொன்ற மருமகன்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூர் கடுதாம் பாடியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி அருக்காணி (65). இவர்களின் மகள் சாமியாத்தாள்(40). இவருக்கும் கோபி அருகே உள்ள சிறுவலூர் ஆயிபாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராமசாமி (44) என்பருக்கும் கடந்த 19

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:38 AM
பகிர்:

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூர் கடுதாம் பாடியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி அருக்காணி (65). இவர்களின் மகள் சாமியாத்தாள்(40). இவருக்கும் கோபி அருகே உள்ள சிறுவலூர் ஆயிபாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராமசாமி (44) என்பருக்கும் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் ராமசாமி தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் சாமியாத்தாள் கணவரிடம் கோபித்து கொண்டு கடுதாம்பாடியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து ராமசாமி மனைவியை குடும்பம் நடத்த பலமுறை சென்று அழைத்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது. மாமியார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ராமசாமி செவ்வாய்க்கிழமை இரவு மாமியார் வீட்டுக்கு சென்றார். பின்னர் மனைவியை குடும்பம் நடத்த அழைத்தார். அப்போது மாமியார் அருக்காணி உன்னுடன் இனிமேல் அவள் குடும்பம் நடத்த வரமாட்டாள் என கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராமசாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அருக்காணியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அருக்காணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராமசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து தப்பி சென்ற ராமசாமியை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்த சிறுவலூர் போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →