சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பண்ருட்டி வருகை
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று காலை பண்ரூட்டி வந்தார். அவருக்கு கடலூர் மாவட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்பளித்தனர்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று காலை பண்ரூட்டி வந்தார். அவருக்கு கடலூர் மாவட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்பளித்தனர்.
மாளிகை மேடு உள்ளிட்ட சில கிராமங்களுக்கு சென்றார். உடன் மாவட்ட செயலாளர்கள் சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாநிலம் முழுவதும் கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நிலையை கணக்கெடுத்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம். முதல் கட்டமாக இப்பகுதிக்கு வந்துள்ளேன். என்றார். மேலும் மின் கண்டன உயர்வை கேட்ட போது கடந்த ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்பட வில்லை நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது. அதனால்தான் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
எனினும் மானியம் வழங்க முயற்சித்து வருகிறது. பால் விலை உயர்த்தப்பட்ட போதும் பால் உற்பத்தியாளர்களுக்கு நேரடியாக 8 ரூபாய் கிடைக்கிறது. எனினும் விலை குறைப்புக்கு அரசு முயற்சித்து வருகிறது என்றும் கூறினார்.