காதல் தகராறில் இளம் பெண் கொன்று புதைப்பு: போலீஸார் விசாரணை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2007ம் ஆண்டு காணமல் போன 16 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதை போலீஸார் கண்டுபிடித்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2007ம் ஆண்டு காணமல் போன 16 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதை போலீஸார் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக கோவை இருகூர் தங்கராஜ் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது தங்கராஜ் என்பவர் அந்த பெண்ணை காதலித்து வந்தது தெரிய வந்தது.
இந்நிலையில் தங்கராஜ் என்பவருக்கும் இடையே நடந்த காதல் தகராறில் செட்டிப்பாளையம் புறவழிச்சாலையில் அந்த பெண்ணை தங்கராஜ் கொலை செய்து புதைத்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து அப் பெண்ணின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டும் பணியை தற்போது போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.