விருதுநகரில் மகளிர் நீதிமன்றத்தை தொடங்க வேண்டும் என்பதை வலியிறுத்தி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் செவ்வாய்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அச்சங்கத்தின் செயலாளர் சுப்புராம் முன்னிலை வகித்தார். இதில், பொருளாளர் ராமமூர்த்தி போராட்டத்தை தொடங்கி வைத்தார். இப்போராட்டத்தில் அரசு உத்தரவிட்டபடி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தை தலைநகர் விருதுநகரில் அமைக்கவும், கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு கூடுதலாக அதிகாரம் வழங்கி முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் விருதுநகர் வழக்குரைஞர்கள் சங்கங்களைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.