தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தினால் பேருந்துகள் இயங்கவில்லை: பொதுமக்கள் அவதி

தமிழகம் முழுவதும் நெல்லை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மண்டல போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்த

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தினால் பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால் பொதுமக்கள் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் நெல்லை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மண்டல போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், விருதுநகர் மண்டலத்திலும் 11 தொழிற்சங்களைச் சேர்ந்த ஓட்டுநர்கள், நடத்துனர்கள் ஆகியோர் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது பல்வேறு 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 29-ம் தேதி முதல் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்கத்தின் கூட்டமைப்பினர் அறித்திருந்தனர். இந்நிலையில் ஒரு நாள் முன்னதாகவே ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இப்போராட்டத்தினா விருதுநகர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பெரும்பாலன பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் இம்மாவட்டத்தில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் பேருந்து இல்லாமல் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் அண்ணா தொழிற்சங்கத்தினர் போரட்டத்தில் கலந்து கொள்ளாததால் சில பேருந்துகள் மட்டும் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. இதனால், விருதுநகரை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆட்டோக்கள் மற்றும் கிடைத்த வாகனங்களில் ஏறி பொதுமக்கள் தங்கள் கிராமங்களுக்குச் சென்று சேர்ந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

ஏழரைச் சனியில் சனி கிரகத்துடன் ஏற்படும் பயண அனுபவம்!

SCROLL FOR NEXT