முகப்பு
தற்போதைய செய்திகள்

கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி துணைத் தலைவர் கைது

விருதுநகர் அருகே பாண்டியன் நகரைச்சேர்ந்தவர் சந்திரன்(40). இந்த நகருக்கு அருகே உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் உசிலம்பட்டி ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர்கள்

Updated On : 3 பிப்ரவரி, 2014 at 3:04 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:48 AM

விருதுநகர் அருகே பாண்டியன் நகரைச்சேர்ந்தவர் சந்திரன்(40). இந்த நகருக்கு அருகே உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் உசிலம்பட்டி ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் பாண்டியன் நகரில் இடத் தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட இடத்தை சொந்தம் கொண்டாடடுவதில் மறுபடியும் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து இடம் எனக்குறியது என்றும், மீறினால் கொலை செய்து விடுவதகாவும் கூறி சந்திரனை மிரட்டினாராம். உடனே இது தொடர்பாக பாண்டியன் நகர்காவல் நிலையத்தில் சந்திரன் புகார் செய்தார். அதன் பேரில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ரமேஷ் மீது வழக்கு பதிந்து போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.