முகப்பு
தற்போதைய செய்திகள்

காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவராக சிதம்பரம் எம்.செந்தில்குமார் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவராக சிதம்பரத்தைச் சேர்ந்த எம்.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:24 AM
பகிர்:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவராக சிதம்பரத்தைச் சேர்ந்த எம்.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் பரிந்துரையின் பேரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியாகாந்தி நியமனம் செய்துள்ளார். எம்.செந்தில்குமார் இதற்கு முன்பு கடலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளராகவும், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயலாளராகவும், மாவட்ட எஸ்சி., எஸ்டி பிரிவு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும், குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.