விருதுநகர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து: ஒருவர் பலி
விருதுநகர் அருகே வெம்பக்கோட்டை சூரார்பட்டி கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலையில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:54 AM
விருதுநகர் அருகே வெம்பக்கோட்டை சூரார்பட்டி கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலையில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
தனியாருக்கு சொந்தமான இந்த இந்த தொழிற்சாலையில் 50க்கும் மேற்பட்ட அறையில் பட்டாசுகள் தயாரிக்கபடுகிறது.
இதில் ஒரு அறையில் தீ பிடித்தது. இந்த விபத்தில் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த சபரிமலையான் (35) என்பவர் பலியானார். பலர் காயம் அடைந்தனர்.
Advertisement
அந்த அறை தரைமட்டமானது. எனினும் தீ அணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீ அணைந்தனர்.