விருதுநகர் மாவட்டத்தில் வெள்ளியன்று 10-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு
விருதுநகர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வெள்ளக்கிழமை தொடங்கி, தொடர்ந்து பிப்.28-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வெள்ளக்கிழமை தொடங்கி, தொடர்ந்து பிப்.28-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.
தமிழகம் முழுவதும் 10-வது வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து ஏப்.9ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில், விருதுநகர் கல்வி மாவட்டத்தில்- 10876 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில்-9928, அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில்-9346 என மொத்தம் 30150 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுத இருக்கிறார்கள்.
இந்நிலையில் அறிவியல் பாட செய்முறை தேர்வு வெள்ளியன்று தொடங்கி, தொடர்ந்து குறிப்பிட்ட நாள் வரையில் நடைபெற இருக்கிறது. இத்தேர்வு அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தப்பட இருக்கிறது. இப்பணிக்காக வெவ்வேறு பள்ளிகளில் இருந்து மேற்பார்வையாளராக ஆசிரியர்களை நியமித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
Advertisement
அதற்கு முன்னதாக ஒவ்வொரு பள்ளியிலும் 100 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக சிறப்பு ஆசிரியர்கள் மூலம் தொடர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், வாசிப்பு மற்றும் படிப்பில் பின் தங்கிய மாணவ, மாணவிகளை கண்டறிந்து ஒவ்வொரு பாடத்திலும் குறிப்பிட்ட மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறும் அளவிற்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதோடு, உடனே திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு மாணவ, மாணவிகளின் தேர்ச்சி பெறும் திறமைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.