சென்னையில் இருந்து கண்டெய்னர் லாரியை கடத்தி வந்த இளைஞர்கள் 2 பேர் கிருஷ்ணகிரி அருகே கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள இருமத்தூர் வனபகுதியில் இன்று காலை கண்டெய்னர் லாரி ஒன்று வெகு நேரமாக நின்றுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள இருமத்தூர் வனபகுதியில் இன்று காலை கண்டெய்னர் லாரி ஒன்று வெகு நேரமாக நின்றுள்ளது.
இதனால் சந்தேசமுற்ற வனத்துறையினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு வந்த போலீஸார் 2 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அந்த லாரி சென்னையில் இருந்து கடத்தப்பட்டது தெரியவந்தது. அவர்கள் இந்த லாரியின் நம்பர் பிளேட்டை மாற்றி நாமக்கல்லில் கொண்டு விற்க திட்டமிட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.