விருதுநகரில் வயிற்று வலி பிரச்னையால் தீக்குளித்தவர் சாவு
விருதுநகர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் சுப்பாராஜ்(47). இவர் வயிற்று வலி பிரச்னையால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும்
விருதுநகரில் வயிற்று வலி பிரச்னையால் தீக்குளித்தவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
விருதுநகர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் சுப்பாராஜ்(47). இவர் வயிற்று வலி பிரச்னையால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் தீராவில்லையாம். இதனால் கவலையடைந்த சுப்பாராஜ் கடந்த செவ்வாய்கிழமை மனைவி மகன் ஆகியோர் வெளியே சென்றிருந்த சமயத்தில் திடீரென தனக்கு தானே சமையலுக்கு வைத்திருந்த மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தாராம்.
இதில் பலத்த காயம் அடைந்த நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார்களாம். அங்கு தீவீர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மகன் ராஜபெருமாள் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Advertisement